1983ல் ரஜினியின் இந்திப்பட அறிமுகம் நிகழ்ந்தது.SACயின் சட்டம் ஒரு
இருட்டறை படத்தின் இந்திப்பதிப்பில் ரஜினி விஜயகாந்த் வேடத்தில் நடித்தார்.அந்தா கானூன்
என்ற அப்படத்தில் அமிதாப் பச்சன் நட்புக்காக கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.
இந்தப்படத்தில் வரும் அமிதாப்பின் பாகத்தையே develop செய்து தோஸ்த்(2001) என்ற படத்தை SAC எடுத்தார்.
அடுத்து 1982ல் காதிர் கான் எழுதி ரவி டாண்டன் இயக்கிய
Khud-daar திரைப்படம் 1985ல் படிக்காதவன் என்ற பெயரில் உருவானது.மறைந்த இயக்குனர் ராஜசேகர்
இயக்கியிருந்தார்.அமிதாப் பச்சனின் மரியாதைக்குரிய சஞ்சீவ் குமார் நடித்த வேடத்தில்
மிகப்பொருத்தமாக சிவாஜி நடித்திருப்பார். It was a Masterly remake.
யஷ் சோப்ரா இயக்கி சலீம் ஜாவேத் எழுதிய தீவார் தமிழில் தீ திரைப்படமாக உருவானதுபோல் 1986ல், Trishul(1978) திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பாக மிஸ்டர் பாரத் திரைப்படம் வெளியானது.S.P. முத்துராமன் இயக்கத்திலும் விசுவின் திரைக்கதை வசனத்திலும் வேறொரு வண்ணம் பெற்றது. சஞ்சீவ் குமார்,சஷி கபூர் வேடங்களை பெருமளவு மாற்றி இருந்தனர்.சலீம்-ஜாவேத் திரைக்கதையை பில்லா,தீ படங்களுக்கு பயன்படுத்திக்கொண்டது போல் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியில் உணர்வுபூர்வமான காவியமாக உருவெடுத்த படம் தமிழில் பொழுதுபோக்குப் படமாக உருவானது.
இந்தப் படத்தில் சஷிகபூர் வேடத்தில் நடித்த S.Ve.சேகர்
"இது தோ சூல் தான்" என்று தன்னுடைய வேடம் குறித்து வருத்தப்பட்டதாகவும் அதற்கு சத்யராஜ் "இல்லை,இல்லை இது ஏக் சூல் தான்" என்று அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.சத்யராஜ் ரஜினியுடன் கடைசியாக இணைந்து நடித்த படம் இது தான்.
1985ல் வெளியான மன்மோகன் தேசாய் இயக்கிய Mard திரைப்படத்தை
ரஜினி மாவீரன் என்ற பெயரில் தயாரித்தார்.தமிழின் முதல் 70mm படம் இது. இந்தியில் அமிதாப் தந்தையாக நடித்த தாராசிங் தமிழிலும் ரஜினிக்கு தந்தையாக நடித்தார். ராஜசேகர் இயக்கியிருந்தார்.
1987ல் பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய நமக் ஹலால்(1982) திரைப்படம் வேலைக்காரன்
திரைப்படமாக உருவானது. கவிதாலயா தயாரித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படம் தோல்விகள்
பல அடைந்திருந்த வேளையில் ரஜினிக்கு வெற்றிமகுடம்
சூட்டியது.
இந்த நிலையில் ரஜினி தொடர்ந்து சிவாஜி,எந்திரன்,கபாலி என இந்திய
சூப்பர்ஸ்டாராக தன்னை தென்னிந்தியாவிலிருந்தே நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.
சிவாஜி திரைப்படம் வெளியான சமயத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம்
வாங்கும் நடிகராக அறியப்பட்ட ரஜினி "இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார்?" என்ற
விவாதத்தை உருவாக்கி விடையையும் அவரே கூறி இருந்தார். “Amithabh is an Emperor, I
am a king probably” என்றார்.
இந்த பதிலை அவர் தன்னடக்கத்துடன் கூறினாலும் இந்த கூற்று தான் அவரது குறிக்கோளாக அமைந்து அவரை செயல்வீரராக வைத்துள்ளது என்று சொல்லலாம்.
************************* மகிழ்ச்சி *************************














































